Friday, August 9, 2013

பித்தனானேன்...!!!

அவள் மண்ணுலக பெண்ணும்மல்ல,
விண்ணுலக தேவதையும் மல்ல,
கற்பனை உலகின் மாயமும்மல்ல,
நிதர்சன உலகின் இசைக்கப்படாத இசை
பாடப்படாத கவிதை;புனையப்படாத பேரிலக்கியம்

அந்த உலகில் நான் என்னை இழந்தேன்
அவள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என்னுள் உயிர்த்தாள்
நான் அவளாகவே உணர்ந்து,சிந்தித்து செயற்பட்டேன்.

அவள் சிருஷ்டித்த உணர்சிகளே என் இயக்க சக்தியானது!
என் மொழி வார்த்தைகளை தொலைத்து மௌனித்தேன்
மனித பிரக்ஞைகளை மரித்து எனை அவள் பித்தனாக்கினாள்...!!

No comments:

Post a Comment