Saturday, August 3, 2013

எங்க டா இருக்க..???

தோள் கொடுத்த தோழமை

எங்கையா இருக்கீக ?????

ஒன்னாம் வகுப்பு படிக்கையில

தத்தி தத்தி நான் நடந்து

பள்ளிக்கூடம் போகையில

கத்திக்கப்பல் செய்யத் தெரியாம

கண்ணீரு வடிக்கையில

அழுத கண்ணீரை அழகா தொடச்சு விட்டு

சிலேட்டு குச்சியை சின்ன சின்னதா உடைச்சு

கப்பல் செய்யுற கலை சொன்ன

புஷ்ப ராசா நீ எங்க இருக்க ?

நாலாம் வகுப்பு படிக்கையில

நாற்கரத்தின் சூத்திரம் தெரியாம

நான் நடுநடுங்கி நிக்கையில

விடை எழுதி கொடுத்து எனக்காக

பழி சுமந்த சரத்தே எங்க இருக்க ?

ஐந்தாம் வகுப்பு படிக்கையில

இரண்டு வரி பேசக்கூட நா தழுக்கும் என்ன

மேடைப்பேச்சு பேச வச்ச ரஞ்சித் எங்க இருக்க ?

பத்தாம் வகுப்பு படிக்கையிலே

வெளிநாடு போறேன்னு சொல்லி போன

ஸ்ரீதர் எங்க இருக்க ?

இப்படி பழைய நண்பர்களை தேடி தேடி பாக்கையிலே

தினம் தினம் மனசு தவிக்குதம்மா

காணமல் போட்ட நட்பை தேடி கண்கள் குளமானதம்மா

தொயரத்தில் பெருந்துயரம்

கல்லூரி வரை

பசங்களோடு நாளும் பழகி

தூரமாய் பழக கூட தோழி ஒன்னு கிடைக்கலையே

பேஸ் புக் ,ட்விட்டர் னு எத்தனையோ வந்தாலும்

எங்க நட்பை கணிச்சு சொல்ல கணிப்பொறியும் திணறுதையா

படச்சவனும் ஏங்கி கெடக்கான்

பழக்க வழக்க நட்ப பார்த்து..!!!!

No comments:

Post a Comment