Friday, November 30, 2012

கணினியில் இந்திய ரூபாய் குறியீட்டைக் கொண்டுவர..

இந்திய ரூபாய் குறீயீட்டை குறிக்கும் வகையில் இந்திய அரசு இந்திய ரூபாயைக் குறிக்கும் குறியீட்டை வெளியிட்டது. கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட இந்தக் குறியீட்டை கணினியில் எப்படி தட்டச்சு செய்வது என நிறையபேர் குழம்பி போயினர்.. பிறகு பலரும் பல வகைகளில் இதற்கு தீர்வு கண்டனர்.. அவற்றில் நாம் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள முறை பயன்படுத்த மிகச் சுலபமாக இருக்கிறது.


இந்திய ரூபாயின் குறியீட்டை கொண்டுவருவதற்கு முன்பு அவற்றை உருவாக்கியவரைப் பற்றியும் அதன் அர்த்தத்தையும் பற்றியும் தெரிந்துகொள்வோம்..

இந்திய ரூபாய்க் குறியீட்டை உருவாக்கியவர்:


இந்திய ரூபாயின் குறியீட்டை உருவாக்கியவர் சென்னையைச் சேர்ந்த உதய குமார் என்பவர். இவர் பழங்கால தமிழ் எழுத்துமுறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இந்த ஆய்வுகளே தனது இந்திய ரூபாய் குறியீட்டின் வடிவமைப்புக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

இந்திய அரசு மார்ச் -5 , 2009 ம் வருடம் இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்குவதற்கான போட்டியை அறிவித்தது. இறுதியில் ஐந்து பேர் வடிவமைத்தக் குறீயீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் ​திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமாரின் வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவர் தற்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்திய ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்து கொடுத்ததன் மூலம் இவர் உலகளவில் புகழ்பெற்றுள்ளார். .​ அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற ​ மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்தான் இந்த உதயகுமார்.

இந்திய ரூபாய்க் குறியீட்டைக் கணனியில் கொண்டுவர...

    இந்த குறியீட்டை உங்கள் கணினியில் கொண்டு வர கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்கி font டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
    http://www.mediafire.com/?3pohrs3hsw9mb7c
    பிறகு control panel சென்று அங்கு Fonts என்ற போல்டரைத் திறக்கவும்.
    டவுன்லோட் செய்து எழுத்துருவை அதில் காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்.
    இப்போது Font போல்டரை மூடிவிட்டு உங்கள் கணினியை Restart செய்துவிடவும்.
    இப்போது Note Pad ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
    அதில் Format மெனுவை கிளிக் செய்து font என்பதை சொடுக்குங்கள். தோன்றும் விண்டோவில் Rupee என்ற பாண்ட்டை தேர்ந்தெடுக்கவும். இப்போது கீர்போர்டில் எண் 1 க்கு முன்னதாக உள்ள கீயை அழுத்துங்கள். இந்திய ரூபாய்க்கான symbol வந்திருக்கும். தேவைப்படும்போது இதுபோல செய்து இந்திய ரூபாய்க் குறீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
    Ms-word, wordpad மற்றும் MS-Excel போன்ற அனைத்து Word processor application களிலும் இது தொழிற்படும்.









இந்த இணைப்பில் சென்று இந்திய ரூபாய் குறீயீட்டிற்கான எழுத்துருவை  டவுன்லோட் செய்துகொள்ளவும்.

http://www.mediafire.com/?3pohrs3hsw9mb7c

குறிப்பு: இந்த எழுத்துருவானது யுனிக்கோட் எழுத்துரு அல்ல. மேலும் இந்த எழுத்துருவைப் பயன்படுத்தி தட்டச்சிட்ட கோப்புகள் அனைத்தும் , மற்ற கணினியில் திறந்து பார்க்கும்போது ரூபாய்க்குறியீட்டைக் காண முடியாது. மற்ற கணினிகளிலும் இந்த எழுத்துருவை நிறுவிய பின்னரே குறீயீடு தோன்றும்.

Monday, November 12, 2012

நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் !!! ( Nostradamus )

~ நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் !!! ( Nostradamus ) ~






இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்; மருத்துவ நிபுணர்; சோதிட ஞானி. இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர். பெரும்பெரும் கற்களைக்கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக் கியவர். இறப்புக்குப் பின் மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி(Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே.

மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame).ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதிவைத்தவற்றில் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டிருக்கின்றன. சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உருவாகக்கூடும். தீராத நோய்களைத் தீர்த்தவர்.

யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?

நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது

நாஸ்ட்ரடமஸ்நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.

சைத்தானின் சீடரா?

அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.

இன்னும் இவருடைய புத்தகத்தை படித்தால் நிறைய புரியாத புதிர்கள் நிறைய இருக்கும்

கறுப்பா, வெள்ளையா?
ஒருமுறை ஒரு பெரிய பிரபுவின் வீட்ட்க்கு விருந்துக்குச் சென்றார். அவருடைய அரண்மனையின் பின்புறம் ஓரிடத்தில் இரண்டு பன்றிகள் இருந்தன. ஒன்று கறுப்பு; இன்னொன்று வெள்ளை. அவற்றைக் காட்டி, "இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம்?", என்று அந்தப் பிரபு நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் சாப்பிட்டுவிடும்," என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

"என்னுடைய அரண்மனை எல்லைக்குள் எங்கிருந்து ஐயா, ஓநாய் வரும்?" என்று எள்ளி நகையாடினார், பிரபு.

அதன் பிறகு நாஸ்ட்ரடாமஸுக்கே தெரியாமல் சமையற்காரரை அழைத்து அந்த வெள்ளைப் பன்றியைக் கொன்று சமைக்கச் சொல்லிவிட்டுப் போனார் அந்தப பிரபு.

அன்றிரவு விருந்தில் பன்றிக்கறி பரிமாறப்பட்டு உண்டுமுடிந்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?"

"கறுப்பு" என்று சற்றும் சளைக்காமல் கூறினார் நாஸ்ட்ரடாமஸ்.

உடனே அப்பிரபு, சமையற்காரரை அழைத்து, விருந்தினர் முன்னிலையில் விசாரித்தார்.

"எந்தப் பன்றியைப் பரிமாறியிருக்கிறாய், என்று இவர்கள் எல்லாரிடமும் சொல்"

"கறுப்புப்பன்றி"

பிரபு அதிர்ந்து போனார்.

"வெள்ளைப் பன்றியை அல்லவா சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதைக் கொன்றாய்?"

"ஆம்! பிரபோ. ஆனால் அடுப்பில் வைத்திருந்த பன்றியை உங்கள் வேட்டை நாய் கெளவி இழுத்துச்சென்று விட்டது. ஆகையால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்", என்று கூறினார் சமையற்காரர்.

அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு வளர்ப்பு ஓநாய்க்குப் பிறந்தது.

நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.

மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.

சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

அம்மூவரில் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.

சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸுக்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெரிந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

"புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.

அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்

Sunday, November 11, 2012

ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள்!






அறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை உருவாக்கியவர் அவர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில் அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர். உச்சாணிக் கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன் திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர். அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன் வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார். அவை மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால் வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர் உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்ப்போமா?

முதல் நிகழ்வு/பாடம்:

17 ஆவது வயதில் கல்லூரிக்குச் சென்ற அவருடைய படிப்புக்கு அவர் வளர்ப்புக் பெற்றோர் செலவழிக்க நேர்ந்த தொகை மிகப் பெரியது. கிட்டத்தட்ட தங்கள் சேமிப்பு முழுவதையுமே அவர்கள் செலவழிக்க வேண்டி இருந்தது. பணவசதி அதிகம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு இத்தனை செலவழித்து படித்து எதை சாதிக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கேள்வி ஆறு மாதம் அலைக்கழித்தது. எந்த விதத்தில் அந்தக் கல்வி அவர் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கல்லூரியில் ஒரு பட்டம் பெற வேண்டி பிடித்ததை விடவும் பிடிக்காததை அதிகமாகப் படித்து கல்வியையும் வாழ்க்கையையும் அவர் சுமையாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

கல்லூரிப் படிப்பை விட்ட அவர் பெற்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர்களின் அறைகளில் தரையில் படுக்க நேர்ந்ததையும், கோகோ பாட்டில்களை சேகரித்து திருப்பித்தந்து கிடைத்த பணத்தில் உணவுக்கு செலவு செய்ததையும், ஹரே கிருஷ்ணா கோயிலில் கிடைக்கும் அன்னதானத்திற்காக ஒவ்வொரு ஞாயிறும் ஏழு மைல் தூரம் நடந்ததையும் நினைவு கூர்ந்த அவர் அத்தனையையும் மீறி அந்தத் தீர்மானம் தனக்கு எப்படி நன்மை செய்தது என்பதைச் சொன்னார். பிறகு பிடித்த விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த கையெழுத்துக் கலை (calligraphy) வகுப்புகளுக்குச் சென்று அதில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.

அது பிற்காலத்தில் அவர் வடிவமைத்த முதல் மேசிண்டோஷ் (Macintosh) கம்ப்யூட்டருக்கு பலவித எழுத்துக்களை உருவாக்குவதற்கு மிகவும் உதவியது.  அந்தக மேசிண்டோஷ் கம்ப்யூட்டர் எழுத்துக்களையே விண்டோஸ் அப்படியே பின்னர் எடுத்துக் கொண்டதால் இப்போதுள்ள கம்ப்யூட்டர்கள் அழகான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸின் அன்றைய எழுத்து வகைகள் தான் உதவியது. மேலும் அவர் தனக்குப் பிடிக்காத கல்லூரிப் படிப்பிலேயே தங்கி இருந்தால் ஒரு ஊழியராக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து அடையாளம் இல்லாமல் போயிருந்திருப்பார் என்பதும் உண்மையே.

மனிதன் ஆட்டு மந்தையாக இருந்து விடாமல் தன் தனித்தன்மையின் படியும் உள்ளுணர்வின் படியும் நம்பிக்கையுடன் இயங்கினால் அது கண்டிப்பாக அவன் வாழ்க்கைக்கும் உறுதுணையாகவும் மிகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பது அவர் முதல் அறிவுரை. அது ஆரம்ப கட்டத்தில் புரியா விட்டாலும் பிற்காலத்தில் கண்டிப்பாகப் புரிய வரும் என்பது அவர் முதல் அனுபவ அறிவுரை.

(படிக்கிற படிப்பை நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல பாடம். திறமையும் ஆர்வமும் வேறொன்றாக இருக்கையில் அதற்கு சம்பந்தமில்லாத படிப்பைத் தொடர்வது வெற்றிக்கு எதிரானது என்பதை அவர் சொல்வதாக எடுத்துக் கொள்வது முக்கியம்.)


இரண்டாம் நிகழ்வு/பாடம்

தன் 20வது வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தை பெற்றோரின் கிடங்கில் ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பத்து வருடங்களில் நூறு கோடி ரூபாய் மதிப்பும், 4000 ஊழியர்களும் கொண்ட நிறுவனமாக உயர்த்தி மாபெரும் வெற்றி கண்டார். ஆனால் அவர் தான் ஆரம்பித்த நிறுவனத்தை விட்டே வெளியேற நேர்ந்தது. அவர் திறமையாளர் என்று எண்ணி நிர்வாகத்தில் சேர்த்த ஒரு நபர் அவருக்கு எதிராக செயல்பட்டு, கம்பெனி டைரகடர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸை வெளியேற்றி விட்டார். எது அவர் வாழ்வின் எல்லாமாக இருந்ததோ எதை அவர் மிக மிக நேசித்தாரோ அது அவர் வாழ்வில் இருந்து பறிக்கப்பட்டது. சில மாதங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் விதியையும், வெளியேற்றிய நபரையும் நொந்து கொண்டு முடங்கி விடாமல் இனி என்ன மிஞ்சி இருக்கிறது என்று யோசித்தார். ஆப்பிள் நிறுவனம் கை விட்டுப் போனாலும் தன் திறமையும், ஆர்வமும் தன்னிடம் இன்னமும் மிஞ்சி உள்ளது என்று தெளிந்த அவர் அதை வைத்துக் கொண்டு மறுபடி நெக்ஸ்ட் (NeXT) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதையும் பின்னர் (Pixar) என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்த அவர் அந்த இரு நிறுவனங்களையும் திறம்பட நடத்திய பின் இரண்டாம் நிறுவனத்தின் மூலமாக டாய்ஸ் ஸ்டோரி என்ற ’கம்ப்யூட்டர் அனிமேஷன்’ திரைப்படம் எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைக் கண்டது.

ஒரு கால கட்டத்தில் அவருடைய நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனமே வாங்கி விட ஸ்டீவ் ஜாப்ஸ் மறுபடி ஆப்பிள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அவர் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கி இருந்த மிக முக்கிய தொழில் நுட்ப மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொண்டு புதிய பரிமாணம் பெற்றது. ஸ்டீவ் ஜாப்ஸ் படிப்படியாக உயர்வையும், உலகப் புகழையும் சந்தித்தார்.

ஆப்பிளில் இருந்து முதல் முறை வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அது பல விதங்களில் நல்லதாகவே முடிந்தது என்று சொன்னார். எத்தனையோ முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஆரம்பத்தில் இருந்து அங்கேயே இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்காது என்கிறார். தான் காதலித்து மணம் புரிந்த மனைவியின் சந்திப்பு முதல், திரைப்படத் துறை பிரவேசம் வரை பல நன்மைகளை அதன் மூலம் சந்தித்ததை அவர் தெரிவித்தார்.

மாற்றங்களும், இழப்புக்களும் நாம் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்காத வரை கசப்பாக இருந்தாலும் கூட மிகப்பெரிய நன்மையையே ஏற்படுத்தும் என்பது அவருடைய இரண்டாவது அனுபவ அறிவுரை. அதனால் எதை நேசிக்கிறீர்களோ அதை விட்டு விட வேண்டாம் என்றும் எதை நேசிக்கிறோம் என்று தெரியா விட்டால் அதைக் கண்டுபிடிக்கிற வரை ஒய்ந்து விட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். அதைக் கண்டு பிடிக்கிற போது அதை இதயம் அறியும், அதன் பிறகு எல்லாமே முன்னேற்றப் பாதையில் முடியும் என்றும் அந்த சாதனை மனிதர் கூறுகிறார்.


மூன்றாவது நிகழ்வு/பாடம்
2004 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு வித கொடிய கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருக்கும் குடும்பத்தாருக்கும் பேரிடியாக இருந்தாலும் அவர் முன்பு போலவே அதையும் நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ள முடிந்தது பெரும் வியப்பே. தன் சிறு வயதில் படித்த ஒரு வாசகம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள் என்பது போல் வாழ். ஒரு நாள் நீ நினைத்த மாதிரியே அதுவே கடைசி நாளாக அமைந்து விடும்”.  அதன் பின் ஒவ்வொரு நாள் காலையிலும் இது என் கடைசி நாளாக இருந்தால் இதை நான் செய்வேனா என்பதே எனது கேள்வியாக அமைந்து விட்டது என்கிறார். பல நல்ல மாறுதல்களுக்கு அந்த கான்சரும் வழிவகுத்து விட்டதாக அவர் சொல்கிறார்.
மரணம் அருகில் இருக்கிறது என்று தெரியும் போது வாழ்க்கையின் அனாவசியங்களில் ஈடுபடாமல் ஒதுக்கி விடுவதும் எது முக்கியம் என்று உணர்கிறோமோ அதில் முழு மனதுடன் ஈடுபடுவதும் சுலபமாகிறது என்பது அவர் சொன்ன மூன்றாவது பாடம். மரணம் நிச்சயமானது, வாழ்க்கை குறுகியது என்பதால் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புபவன் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் இருக்க அவர் அறிவுறுத்துகிறார். அந்தக் குறுகிய வாழ்க்கையை அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்காக வாழாமல் இருக்கும்படியும் இதயபூர்வமாக உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாக வாழும்படியும் அவர் கூறுகிறார்.
(2005ல் இதை அவர் குறிப்பிட்டாலும் அக்டோபர் 2011 வரை அவர் உயிர் வாழ்ந்தார். கடைசி நாட்களில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் அன்புக் குடும்பத்துடன் கழித்து அமைதியாக உயிர் விட்டார்.)
வெற்றியை பணத்தால் மட்டும் அளக்க முடியாது. மனம் விரும்பிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அப்படி வாழ முடிந்தவன் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பது முட்டாள்தனம். மனம் விரும்பிய வாழ்க்கையுடன், பணத்தையும், வெற்றியையும் சேர்த்தே ஒருவன் பெற முடியும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு மிக நல்ல உதாரணம். அப்படிப்பட்ட மனிதர் அன்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களுக்கு சொன்ன இந்த முப்பெரும் அறிவுரைகள் எக்காலத்திலும் எவருக்கும் ஏற்றுக் கொண்டு வாழத்தக்க அறிவுரைகள். அதை நம் இதயத்திலும், கருத்திலும் ஏற்றுக் கொண்டு பலனடைவோமே

'மெண்டல் ஸ்ட்ரெஸ்'


இன்போசிஸ் பெண் ஊழியர் கொலையா? அவிழும் முடிச்சுகளும் திடுக்கிடும் பின்னணியும்.


கடந்த வாரம் ஹைதராபாத்-ல் உள்ள இன்போசிஸ் கம்பெனியின் கார் பார்க்கில்,அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.பத்திரிக...ைகளில் இப்படித்தான் செய்தி வெளியாகியிருந்தது.இது நடந்தது ஜூலை 31 ஆம் தேதி இரவு.இதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் அடுத்தடுத்து வெளிவர,ஒட்டுமொத்த ஆந்திராவே பரப்பரப்
பானது.தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்களிடையே இந்தச்செய்தி காட்டுத்தீயாய் பரவ அவர்களுக்கும் கலவரம் தொற்றிக்கொண்டது. ஆந்திரா ஊடகங்கள் அனைத்திலும் கடந்தவாரம் இந்த செய்திதான் நிரம்பி வழிந்தது.நம்பமுடியாத பல திருப்பங்களுடன் சென்ற இந்த வழக்கு தற்போதுதான் இறுதி நிலையை எட்டியுள்ளது.

அந்தப் பெண்ணைப்பற்றி சிறிய அறிமுகம்.பெயர் நீலிமா.தற்போது 27 வயதை தொட்டிருக்கும் இவர் 2006-ல் இன்போசிசில் வேலைக்கு சேர்ந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த சுரேஷ் ரெட்டி என்பவரை 2009-ல் திருமணம் செய்தார்.இவர் ஹைதராபாத்-ல் செல்போன் கம்பெனி ஒன்றின் டீலர் ஆக இருக்கிறார். இவர்களின் காதல் திருமணத்திற்கு சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.


நீலிமா அதிபுத்திசாலி.B.E கம்ப்யுடர் சயன்ஸ் படித்து,பின் M.E முடித்தவர்.மிக தைரியசாலியும் கூட. குறுகிய காலத்திலேயே கம்பெனியில் உயர் பதவிக்கு வந்தவர்.யு.எஸ்-க்கு வேலைக்குச் சென்ற சில மாதங்களிலே ப்ராஜக்ட் டீம் லீடாக பதவி உயர்வுபெறும் அளவுக்கு திறமையானவர்.யு.எஸ்-ல் தனியாக .'.பிளாட் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.அவரைப்பற்றி அவர் குடும்பத்தினரும் நண்பர்களும் நல்லவிதமாகவே சொல்கிறார்கள்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி கம்பெனி ப்ராஜக்ட் தொடர்பாக வெளிநாடுகள் சென்று பணிபுரிய பணிக்கப்படுவது வழக்கம்.ஆண் பெண் என்ற பேதமில்லாமல் யு.எஸ், சிங்கப்பூர்,ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ அந்தந்த ப்ராஜக்ட்-க்கு ஏற்ற மாதிரி கம்பெனிகளால் அனுப்பிவைக்கப்படுவர்.கொஞ்சம் சிரமம் என்றாலும் இரட்டைச் சம்பளத்திற்காக மறுப்பேதும் சொல்லாமல் இதை எற்றுக்கொள்பவர்களே மிக அதிகம்.அப்படித்தான் நீலீமாவும் கடந்த வருடம்(2011) அமெரிக்க சென்றிருக்கிறார்.கணவரும்,குழந்தைகளும் ஹைதராபாத்தில் இருக்க இவர் மட்டும் அமெரிக்காவில் உள்ள .'.புளோரிடாவில் ஓராண்டுக்கு மேல் தனியாக வசித்திருக்கிறார்.கடந்த ஜூலை 22ஆம் தேதி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் நீலிமா.கணவரையும் குழந்தைகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு செல்வதற்காக வரும்போதே ரிடர்ன் டிக்கெட்-ம் சேர்த்துதான் எடுத்து வந்திருக்கிறார்.ஆகஸ்ட் 17ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்க செல்ல திட்டமிட்டிருந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

சம்பவத்தை வைத்து இது கொலைதான் என்று ஓரளவு கணித்த போலீஸ்,விசாரணையை முதலில் இன்போசிஸ் ஊழியர்களிடமிருந்து தொடங்கியது.இவர் கீழே விழுந்து இறந்ததாக சொல்லப்படும் அந்த நேரத்தில் கார்பார்க்கில் காரை நிறுத்த வந்த மூன்று ஊழியர்களை கைது செய்து விசாரித்தது. அவர்களிடமிருந்து உபயோகமான எந்தத் தகவலும் கிடைக்காததால் அடுத்து நீலீமா விழுந்து கிடந்ததை முதலில் பார்த்த செக்யுரிடியிடம் விசாரணை செய்தார்கள்.நீலிமா விழுந்த சத்தம் தனக்கு கேட்டதாகவும் உடனே சென்று பார்க்கையில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என அந்த செக்யுரிட்டி தெரிவித்தார்.மேலும் அவர் விழுந்ததாக சொல்லப்படும் அந்த மல்டி ஸ்டோரி கார் பார்க்கை சோதனையிட்டபோது, பத்தாவது மாடியில் நீலிமாவின் பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது.அதேவேளையில் அவரில் ஒரு செருப்பு ஏழாவது மாடியில் கிடந்திருக்கிறது.அப்படிஎன்றால் அவரை யாரோ பத்தாவது மாடியிலிருந்து துரத்தி வந்து ஏழாவது மாடியில் வைத்து தள்ளிவிட்டிருக்க வேண்டும்.ஆரம்பகட்டத்தில் போலீசின் ஊர்ஜிதம் இப்படித்தான் இருந்தது.

போலிசுக்கு கிடைத்த முதல் துப்பு அந்தக் கம்பெனியில் பொருத்தப் பட்டிருக்கும் CCTV கேமராவில் பதிவான காட்சிகள்தான்.அதில் பதிவாகியிருந்த விடியோவப் பார்த்த போது,அதில் நீலிமா கம்பெனி ஐடியை நுழை வாயிலில் ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே நுழையும் காட்சி பதிவாகியிருந்தது.அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்.பின்பு ஆபிசில் ஒருமணி நேரம் இருந்து விட்டு அங்கிருந்து வெளியியிருக்கிறார்.போலிசை குழப்பிய இன்னொரு விஷயம்,அவர் அன்று காரில் வரவில்லை.பிறகு எதற்காக கார் பார்க்கின் பத்தாவது மாடிக்கு செல்ல வேண்டும்?




இதற்கிடையில், 'நீலிமா இறந்தது இரவு 10.30மணி.ஆனால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதிகாலை 3 மணிக்குதான்.அப்படியென்றால் இடைப்பட்டக் காலத்தில் என்ன நடந்தது.? சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் 10.30 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் அவரின் கணவர் சுரேஷுடன் செல்போனில் தொடர்பு கொண்டு,இன்று இரவு அம்மா வீட்டிற்கு செல்கிறேன்.காலையில் வந்து அழைத்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கெல்லாம் அவள் பலவீனமானவள் அல்ல. அவரை இன்போசிஸ் கம்பெனி ஊழியர்கள்தான் கொலை செய்திருக்கிறார்கள்' என நீலீமா தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட,விவகாரம் பெரிதாகி வழக்கு சூடு பிடித்தது.விசாரணை இன்னும் முடிக்கிவிடப்பட மர்ம முடிச்சுகள் மெதுவாக அவிழத்தொடங்கின.


அடுத்து நீலீமாவின் செல்போனை ஆராய்ந்த போலிசுக்கு மீண்டும் பின்னடைவு.அதில் உள்ள போன் நம்பர்கள் உட்பட அனைத்து தகவல்களும் மொத்தமாக அழிக்கப்பட்டிருந்தது.தொடர்பு கொள்ள நம்பர் இல்லாததால் தான் இன்போசிஸ் ஊழியர்களால் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க தாமதமாயிற்று என தெரியவந்திருக்கிறது.நீலிமா எதற்கு போன் நம்பர்களை அழிக்க வேண்டும்? அல்லது வேறு யாரவது அழித்திருப்பர்களா?.

இதிலிருந்துதான் வழக்கு வேறு ஒரு கோணத்தில் செல்ல ஆரம்பித்தது.அடுத்து விரைவாக செயல்பட்ட போலீசார் நீலிமாவின் செல்போனிலிருந்து எந்தந்த நம்பருக்கு அழைப்பு சென்றிருக்கிறது என்ற தகவலை(CDR) திரட்டினர்.அதில்தான் இந்த வழக்குக்கான மொத்த முடிச்சும் இருந்தது.கடைசியாக நீலீமா பேசியது அவரின் கணவருடன்தான் என்று இதுவரை போலிஸ் நம்பியிருந்தது.ஆனால் அவருடன் போனைத்துண்டித்த அடுத்த நிமிடமே நீலிமாவின் செல்போனுக்கு மும்பையிலிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது.அதுதான் நீலிமா பேசிய கடைசி நம்பர்.நீலிமா பேசிமுடித்த அடுத்த சில நொடிகளில் நீலிமா செல்போனிலிருந்து அந்த நம்பருக்கு ஒரு மெசேஜ் போயிருக்கிறது.இது கிட்டத்தட்ட இறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு.அதுதான் இந்த வழக்கின் போக்கையே மாற்றிய முக்கிய தடயம்.நீலிமா அந்த மும்பை நம்பருக்கு கடைசியாக அனுப்பின மெசேஜ் இது தான் ." I want to be a good wife to you in my next birth ”

உடனடியாக அந்த நம்பரின் விபரங்களை திரட்ட ஆரம்பித்தது போலிஸ்.அது மும்பையில் இருக்கும் பிரஷாந்த் என்பவரின் போன் நம்பர்.ஆக,இந்த வழக்கின் மையப்புள்ளியே பிரசாந்த் தான் என முடிவுக்கு வந்தது போலிஸ். இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள இவரது நண்பர்களிடமும் தனியாக விசாரணை நடந்து கொண்டிருந்தது.அங்கிருந்து இவர்களுக்கு மற்றொரு தகவல் ஓன்று கிடைத்தது.இவர் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட விளம்பரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.அப்படியானால் இவர் திரும்பவும் அமெரிக்க செல்வதற்கான திட்டம் இவரிடம் இல்லை என்று தெரியவர,போலிசுக்கு நீலிமா மீதிருந்த சந்தேகம் வலுத்தது.

பிரசாந்தைப்பற்றி நீலிமாவின் கணவர் சுரேஷ் ரெட்டியிடம் விசாரித்தபோது,தான் நீலிமாவின் பிறந்தநாள் பார்டியில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றிருந்ததாகவும்,நிறைய நண்பர்களை நீலிமா அறிமுகம் செய்துவைத்தபோது அதில் பிரசாந்தும் இருந்தான் எனவும் மற்றவர்களைப் போல் ஒரு சாதாரண நண்பன்தான் என தெரிவித்தார்.பிரசந்தைப்பற்றி மற்ற தகவல்களை சேகரித்த போலிசுக்கு,பிரசாந்தும் நீலிமாவும் முன்பு இன்போசிசில் ஒன்றாக வேலை பார்த்ததாகவும் பிறகு பிரசாந்த் CTS க்கு சென்று விட்டதாகவும், நீலிமாவைப்போல் பிரசாந்தும் கம்பெனி ப்ராஜக்டுக்காக அமெரிக்க சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

அடுத்து அதிரடியாக களமிறங்கிய போலீஸ்டீம் நீலிமாவின் EMAIL,FACEBOOK -ஐ திறந்துப் பார்க்க முடிவு செய்தது.அதன் பாஸ்வேர்ட் இல்லாததால் சில தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் திறக்கப்பட,அதில் கிடைத்த தகவல்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக அமைந்தது.அவரின் ஈமெயில் முழுவதும் பிரசாந்துக்கு அனுப்பிய மெசேஜ்-ஆல் நிரம்பி வழிந்தது.அவற்றைத் திறந்து படித்தபோதுதான் நீலிமாவுக்கும் பிரசாந்துக்கும் இடையே தனி 'லவ் டிராக்' இருந்தது போலிசுக்கு தெரிய வந்தது.சமீபத்திய மெயில்களை திறந்து படித்தபோதுதான் மற்றொரு அதிர்ச்சியும் இருந்தது.அதில் அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை சில நாட்களுக்கு முன்பே எடுத்து அதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பது ஈமெயில் மூலமாக நிரூபணமானது.பிரசாந்துக்கு அனுப்பிய கடைசி மெயிலில் 'அடுத்த ஜென்மத்திலாவது இணைவோம்' என்று எழுதியிருக்கிறார்.

கடைசி நேரத்தில் நீலிமாவுக்கும்,பிரசாந்துக்குமிடையேயான ஈமெயில் பரிமாற்றம்...

இதன் கடைசி திருப்பமாக,இந்தப்பிரச்சனையில் பிசியாக இருந்த சுரேஷ் ரெட்டி,மூன்று நாள் கழித்துதான் அவரின் ஈமெயில்-ஐ எதோச்சையாக திறந்து பார்த்திருக்கிறார்.அதில்,நீலிமா தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் அனுப்பிய ஈமெயில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி திறந்து படித்திருக்கிறார். அதில்தான் நீலிமாவின் "திட்டமிட்ட தற்கொலை"க்கான முழு ஆதாரம் சிக்கியது.அந்த ஈமெயிலில் தனது கடைசி ஆசையாக,தான் இறந்த பிறகு தன் சொத்துக்கள் யார் யாருக்கு போகவேண்டும் மேலும் பி.'.எப், இன்சுரன்ஸ்-லிருந்து வரும் பணம் யார் யாருக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்,தன்னிடம் உள்ள நகைகள் யாருக்கு போய் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதியிருக்கிறார்.அமெரிக்காவில் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை பாக்கி $500,பிரசாந்திடம் வாங்கிய கடன் $4000 அனைத்தையும் செட்டில் செய்ய வேண்டும் எனவும் தெளிவாக குறிப்பிட்டிருந்திருக்கிறார். கடைசியில்,தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும்,தனக்காக யாரும் வருந்த வேண்டாம் என்றும் இந்த வாழ்க்கை தனக்கு வெறுத்து விட்டதாகவும் இந்த வாழ்க்கையை தொடர தனக்கு விருப்பமில்லை,என முடித்திருக்கிறார்.

நீலிமா கொலைதான் செய்யப்பட்டிருக்கிறாள்.கொலையாளியை விரைந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று தெருவில் இறங்கி போராடாத குறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த நீலிமா குடும்ப உறுப்பினர்கள் தற்போது இது தற்கொலைதான்,இந்த வழக்கை இனிமேல் தொடரக்கூடாது,உடனே நிறுத்த வேண்டும் என காவல்துறையினரிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு நிறைவுப்பகுதிக்கு வந்தாலும் இன்னும் விடை தெரியாத மர்மங்கள் சில உள்ளன.

நீலிமா,தற்கொலைக்காக தன் ஆபிசை அதுவும் கார் பார்க்கை ஏன் தேர்ந்தெடுத்தார்.....?

சுரேஷ்-ம் நீலிமாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நீலிமாவுக்கு இன்னொருவருடன் அதுவும் திருமணம் நடந்து ஐந்தே வருடத்தில் 'லவ் அ.'.பயர்' வருமளவுக்கு கணவன் மனைவி இடையே என்னப் பிரச்சனை?

இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் ஒரு தாய்,தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்லவைத்தது எது?

தற்கொலை என்பது திடீரென்று எடுக்கும் முட்டாள் தனமான முடிவு.ஆனால் பல நாட்களாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால் இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்ற மனைவியின் மனநிலையை,ஒரு கணவனால் புரிந்து கொள்ள முடியாமலா இருக்கும்?

இது போன்ற கேள்விகளெல்லாம் நீலிமாவோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகிவிடும்.ஆனால் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

பெண்களை வெறும் போதை பொருளாகப் பார்த்த ஆண் வர்க்கம்,தற்போது பணம் அடிக்கும் இயந்திரமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.இந்தத் தற்கொலை,கள்ளக்காதல் கைகூடவில்லை என்ற விரக்தியில் ஏற்பட்டது என்று மேலோட்டமாக அலசிவிட முடியாது.வெறும் 26 வயதே நிரம்பிய ஒரு பெண்,தன் ஆசையான இரு குழந்தைகளையும் பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் வாழும் அளவுக்கு அவளின் மனநிலை மாற்றப்பட்டிருக்கிறது.அதன் மூலம் கடுமையான மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கலாம்.அதற்கு மருந்தாக பிரஷாந்தின் ஆறுதலான வார்த்தைகள் இருந்திருக்கலாம்.

பொதுவாகவே I.T துறையில் வேலை என்பது ஒரு 'மெண்டல் ஸ்ட்ரெஸ்' உள்ள வேலைதான்.இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களே.நேரம் காலமில்லாமல் வேலை செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் வேறு.பெரும்பாலும் இந்தத்துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே நிறைய 'கம்மிட்மெண்ட்ஸ்'. வீட்டு லோன்,கார் லோன்,இன்ஸ்யுரன்ஸ் என்று வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலே கடன்காரியாக்கபடுகிறார்கள்.இதற்காகவே திருமணத்திற்குப் பிறகு வேலைக்குக் கட்டாயம் சென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம்.இதில் வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகி வேலை செய்பவர்களுக்கு பிரச்சனை குறைவுதான்.ஆனால் 'ஆன்-சைட் ஒர்க்' என்ற பெயரில் கிளைன்ட் இடத்திற்கே சென்று ஒருவருடம்/இரண்டு வருடம் ஒப்பந்தம் அடிப்படையில் வேலைபார்க்கும் சூழ்நிலையில்தான் இதுபோன்ற பிரச்சனை வருகிறது.இது மாதிரி சூழ்நிலையில் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல்,தன் குடும்பத்தையும் கவனிக்கவேண்டும் என்கிற அக்கறை மனப்பான்மையோடு, இது போன்ற வாய்ப்புகளை பெண்கள் தவிர்த்து விடுவதுதான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும்

மாயன் காலண்டர்





2012 உலக அழிவு என்றதுமே...

அனைவரும் "மாயன்" களின் நாற்காட்டியைத்தான் முக்கியமாக குறிப்பிடுகிறார்கள்.
மாயன்கள் என அழைக்கப்படும் சாம்ராஜ்ஜம்.
எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில், தென்னமெரிக்க பகுதியில் வாழ்ந்த உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டமாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட கலண்டர் உலகின் பல முக்கிய சம்பவங்களை எதிர்வுகூறத்தக்கதாக இருந்ததுடன், நவீன கலண்டருக்கு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளதாம்.


அப்போதைய காலத்தில் என்னென்று இவ்வளவு துள்ளியமாக நாற்காட்டியை வடிவமைத்தார்கள், என்பது இன்னமும் விளங்கமுடியாத புதிராகவே இருக்கிறது.
சரி... இந்த மாயன்களுக்கும் 2012 இக்கும் (உலக அழிவுக்கும்) என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போம்.மாயன்கலால் உருவாக்கப்பட்டு பாவிக்கப்பட்டதாக கருதப்படும் நாட்காட்டியில் இறுதி நாளாக 2012. 12. 21 குறிப்பிடப்பட்டுள்ளது. ( அதாவது அதோட கலண்டர் முடியிது.)
அதை முக்கியமாக வைத்துத்தான் 2012 ஓட உலகம் அழியப்போறதா சொல்லுறாங்க.
ஆனால், அதுக்கு பின்னரும் ஒரு வேறு நாற்காட்டி இருக்கலாம்.அது இன்னமும் ஆய்வாலர்களால் கண்டுபிடிக்கப்படாமலிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.


முதலாவதாக... மாயன் நாகரீகம் நிலவிய காலத்தில் நிலவிய எகிப்திய நாகரீகத்தில் இது பற்றி எதாச்சும் இருக்கா என்று பார்த்தால்... இருக்கிறது.
எகிப்திய பிரமிட்களின் சுவர்களில் உள்ள சித்திர எழுத்துக்கள் பல எதிர்கால உலக நிகழ்வுகளைப்பற்றியவையாம்.



எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 10000 ம் தொடக்கம் 5000 ஆண்டளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்போதே அவர்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்... பூமியின் விட்டமெல்லாம் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள்.
அவ்வளவு அறிவை அந்தக்காலத்திலேயே பெற்றிருந்தவர்களுக்கு பூமியின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் சூட்சுமமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
அவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்ததின் படி 2007 இக்கும் 2023 இக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மட்டுமே தெளிவாக கூறக்கூடியதாக உள்ளதாம்.


அந்த ஆபத்து என்னத்தால் ஏற்படப்போகிறது என்பதில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.
யுத்தம் (3ம் உலகயுத்தம்.) , சுனாமி, நில நடுக்கம், பாரிய கண்டப்பெயர்ச்சி, கடும் வறட்ச்சி, தொடர் மழை, புயல்... என பல காரணங்கள் அந்த எழுத்துக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.


அடுத்து... நொஸ்ராடாமஸ் ( தீர்க்கதரிசி ) சொன்னதை பார்த்தால்...
அவரின் கணிப்பின் படி... ஃபீக்கஸ் எனும் நட்சத்திரம்... ( 13வது ராசி) 2012 இல் தோன்றுகிறதாம். அதன் பலனாக பாரிய அழிவுகள் ஏற்படுமாம்.
மேலும் அவரது கணிப்புக்களின் படி 3ம் உலகயுத்தம் இடம்பெறும்காலமாக 2007 தொடக்கம் 2023,30 என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்துப்படி...
"3ம் உலகயுத்தத்தில் கருவை அழிக்ககூடிய (அணு) ஆயுதங்களால் போர் கொரூரமாகும்... இந்த ஆய்தங்களின் தாக்கத்தால் கடல் அலைகள் 100 அடி உயரம் வரை எழும்... 100 கோடி பேர் சாவது என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. போரின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்."
இதுவும் 2012 ஓடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது.

அடுத்து... புவியியலாலர்களின் கருத்துப்படி
பூமியில் 2000,2100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறியலவிலான பனியுகம்
( உறைபனிக்காலம்) ஏற்படுமாம்.
இப்படியேற்பட்ட ஒரு குறுகிய பனியுகமே நீண்ட காலமாக செழிப்போடிருந்த எகிப்திய ராஜ்யியம் திடீரென வீழ்ச்சியடைந்ததுக்கு காரணம்.
அது ஏற்படக்கூடிய கால கட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.
அது 2012 இல் தான் ஏற்படுமென... ஊகித்து உலக அழிவுடன் ஒப்பிடுகிறார்கள்.
அடுத்து... சமயங்களுடன் ( மதங்களுடன்) இதை சம்பந்தப்படுத்தியும் பார்க்கிறார்கள்.
பொதுவாக மதங்களில் உலகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். அந்த புதுப்பிக்கப்படும் காலம் 2012 இலாக இருக்கலாம்... என்றும் கருதுகின்றார்கள்.


சமீபத்தில்... பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்... புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம், அதீத குளிர், புவி நடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல்... போன்றன... ஏதோ ஒரு ஆபத்து இருக்கு என்பதை காட்டுகிறது.

Saturday, November 10, 2012

பேஸ்புக்

 

பேஸ்புக்- முதல்பக்கம் 


மிஸ்டர் மார்க் ஷக்கர்பெர்க், 

ல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான புகைப்படங்களை திருடிய குற்றத்திற்காகவும், அந்த படங்களை உங்கள் சொந்த உபயோகதிற்கு பயன்படுதியமைக்காகவும், கல்லூரி இணைய செயல்பாட்டை முடக்கி இயங்கவிடாமல் செய்தமைக்காகவும், தனிப்பட்ட நபர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் புகைப்படங்களை விளையாட்டுப் பொருட்களாக மாற்றியமைக்காகவும் கல்லூரி நிர்வாகம் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது. கல்லூரி ஒழுங்குக் கமிட்டியின் முன்பு ஆஜராகி உங்கள் தரப்பை விளக்க வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிடுகிறது. 
- ஹார்வர்டு பல்கலைக்கழகம் 


மார்க் முதல்முறையாக எதிர்பார்ப்பையும் எதிர்ப்பையும் ஒருசேர சம்பாதித்த தருணம் இது. அதற்க்குக் காரணி அவருடைய பேஸ்மேஷ் என்னும் மென்பொருள். பேஸ்புக்கிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும், இன்றைய உலகமே இணையத்தில் இணைந்திருக்கக் காரணமும் பேஸ்மேஷ் என்னும் மென்பொருள் தான். மார்க் ஷக்கர்பெர்க் மற்றும் அமெரிக்க கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் பேஸ்புக் என்பது புதிய வார்த்தை இல்லை. தங்கள் அன்றாட கல்லூரி வாழ்கையில் பேஸ்புக்கை சந்திக்காமல அவர்கள் கடந்தது இல்லை. அமெரிக்கக் கல்லூரிகளில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள ஒவ்வொரு கல்லூரியும் பேஸ்புக் என்னும் புத்தகத்தை வெளியிடுவார்கள், அதில் அந்த கல்லூரி மாணவரின் தகவல்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு எண் என்று அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலத்தில் அச்சுப் புத்தமாக வெளிவந்த பேஸ்புக் பின்னாளில் டிஜிடலாகவும் மாறியிருந்தது. இந்த டிஜிடல் வடிவ பேஸ்புக்கிலிருந்து தான் இன்றைய தினத்தில் உலகமே உபயோகம் செய்யும் கமர்சியல் பேஸ்புக்கிற்கான விதை போடப்பட்டது. 

                         
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்பது விடுதிகள் இருந்தன. அதில் ஒவ்வொரு விடுதிக்கு என்றும் தனித் தனி பேஸ்புக் உண்டு. மார்க் இருந்த விடுதியின் பெயர் கிர்க்லேன்ட் ஹவுஸ். இந்த விடுதியில் இருக்கும் மார்க்கின் அறை தான் அவரது ஆய்வுக்கூடம், அனைத்து செயல்முறைப் பயிற்சிகளும் இங்கிருந்தே ஆரம்பமாகின. அப்படி நடைபெற்ற ஒரு சோதனை முயற்சி தான் பேஸ்மேஷ். அதன் வெற்றி அவரை அழைத்துச் சென்ற இடம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு கமிட்டி அறை. 

ன்றைய இணைய உலகத்தில் மிகவும் கவர்சிகரமான பொழுதுபோக்கு விளையாட்டு "பேஸ்மேட்ச்" அல்லது "ஹாட் ஆர் நாட்". உங்களுக்குப் பிடித்த சில பிரபலங்களை நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் பெயர் A B C மற்றும் D. இந்த விளையாட்டை தொடங்கும் பொழுது A மற்றும் Bயின் முகம் திரையில் தெரியும், அதில் உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு பிரபலத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வோட்டு Aக்கு என்றால், B மறைந்து C தோன்றும் A அப்படியே இருக்கும். இப்பொழுதும் உங்கள் வோட்டு Aக்கு என்றால், C மறைந்து D தோன்றும். கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் உலகம் முழுவதும் தங்களுக்கு பிடித்த பிரபலத்திற்கு வாக்களிக்கும், இறுதியில் யார் முதல் இடம் என்று தெரிவிக்கும். தங்களுக்குப் பிடித்த பிரபலம் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் மொத்த இணையமும் போட்டி போடும். அந்த காலத்தில் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த விளையாட்டில் தான் தங்கள் அதிக நேரத்தைக் களித்தார்கள். 


 
அக்டோபர் 28, 2003 அன்று மார்க் சிறிது குடித்திருந்தார். அந்தி சாய்ந்த இருள்வேளை மனம் முழுவதும் எரிச்சலும் கோபமும், அதற்கான காரணம் ஒரு பெண். பெண்? ஆம் ஒரு பெண். பேஸ்மேஷ் மற்றும் பேஸ்புக் இரண்டின் தொடக்கமும் ஒரு பெண்ணிலிருந்தே. மார்க்கைப் பொறுத்த வரையில் எதாவது ஒரு விசயத்தில் தன்னை ஈடுபடுத்தி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார். அவரது மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவரது மனம் எந்நேரமும் எதாவது ஒரு அல்காரித மொழியுடன் பேசிக் கொண்டே இருக்கும். ஒரு விசயத்தில் முடிவெடுத்து விட்டால் அதனுடன் பயணிக்க ஆரம்பித்துவிடுவார். அன்றும் அப்படித்தான் எரிச்சலின் உச்சத்தில் இருந்த மார்கிற்கு வேறு எதிலாவது தன் சிந்தனையை செலுத்த வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார். 

மக்கெல்லாம் ரிலாக்ஸ்ஷேசன் மன நிம்மதி வேண்டும் என்றால், செய்யும் வேலையிலிருந்து நம்மை விடுவித்து பொழுது போக்குகளில் மனதை செலுத்துவோம். மார்க்கும் அப்படித்தான், இங்கு வித்தியாசப்படுவது அவருக்கும் நமக்குமான பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. கல்லூரியில் படிக்கும் காலத்தில் படிப்பு தவிர்த்து பொழுதுபோக்காக பல்வேறு விதமான ப்ரோஜெக்ட்டுகளை சக மாணவர்களுக்கு செய்து கொடுப்பார். சிலவற்றை பணத்திற்காகவும் சிலவற்றை மன நிம்மதிக்காகவும் செய்வார். இந்த ப்ரோஜெக்ட்டுகளை செய்வதற்கு அவர் தேர்ந்து எடுத்த நேரம் அவருடைய பொழுதுபோக்கு நேரம் அல்லது அவரது பாடவேளைகளுக்கும் தூக்கத்திற்கும் இடையிலான பல மணி நேரங்கள். மார்க் தூங்குவது சில மணி நேரங்களே ஏனைய நேரம் முழுவது அவர் மனதில் லயித்திருப்பது எதாவது ஒரு விதமான ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்.


ங்கள் மனதில் A B C D யின் இடத்தில உங்களுக்குப் பிடித்த நடிகர்களை  
(உம் : ரஜினி கமல் அஜித் விஜய்) வைத்து பேஷ்மேட்ச் ஆட்டத்தை ஆடிப்பாருங்கள், ஏன் பல இளைஞர்களும் தங்களுக்குப் பிடித்த பிரபலத்தை முன்னிலைப் படுத்த ஓயாமல் வாக்களித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது புரியும். இதே போன்ற அல்லது இதே விளையாட்டிற்கு வேறு முகம் கொடுத்தவர் தான் மார்க். இந்த பேஷ்மாட்சை அடிப்படையாகக் கொண்டு உருவான விளையாட்டிற்கு மார்க் வைத்த பெயர் தான் பேஷ்மாஷ். தன்னிடம் இருந்த எரிச்சலை திசை திருப்ப வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்த நேரம் மார்க்கின் கணினியில் திறந்திருந்த தளம் கிர்க்லேன்ட் ஹவுசின் பேஸ்புக். அதில் இருந்த புகைப் படங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மார்க். இந்த நேரத்தில் மார்க் முகத்தில் ஒரு பிரகாசம் பல நாள் தேடிக் கொண்டிருந்த ஒரு புதிருக்கான விடை கணப் பொழுதில் தான் மனக்கணினியில் வந்து சென்றது போன்ற உணர்வு. சிந்தனை முழுவதையும் கிர்க்லேன்ட் பேஷ்புக்கில் செலுத்தத் தொடங்கினார்.

மார்க்கிற்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. தான் பார்க்கும் எந்த ஒரு நபரையும் எதாவது ஒரு விலங்குடன் பொருத்திப் பார்ப்பது, பின்பு அதை நினைத்து நினைத்து சிரிப்பது அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டலடிப்பது. தான் கணினியில் திறந்திருந்த கிர்க்லேன்ட் ஹவுஸ் பேஸ்புக்கைப் பார்த்தவருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. நம்மைப் போல் பலரும் மற்றவர்கள் முகத்தை கிண்டலடிக்க நினைப்பார்கள், அதனால் அனைவரது புகைப்படத்தையும் இணையத்தில் ஏற்றி அதன் அருகில் அவரைப் பற்றி எழுத சிறு இடம் கொடுக்க வேண்டும். ஒருவரது முகத்தைப் பார்க்கும் பொழுது என்னவெல்லாம் எழுதத் தோன்றுகிறதோ எழுதட்டும். அதனை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நிற்க, ஒருவரது புகைப்படத்தை மற்றவர்கள் பார்க்கும் பொழுது "அழகாய் இருக்கிறாய்"," உன் முகம் இன்று பொலிவுடன் இருக்கறது" என்பது எழுதக் கூடாது. "உன் முகம் கொரில்லா போல் இருக்கிறது", "உன்னை விட காட்டெருமை கூட அழகாய் இருக்கும்" என்பது போன்ற வாசகங்களைத் தான் மற்றவர்கள் எழுத வேண்டும் என்று மார்க் நினைத்தார்.

                                       
ந்த எண்ணத்தை தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட மார்க் அவர்களின் விருப்பத்தையும் கேட்டார். இங்கு மார்க்கின் நண்பர்கள் சிறிது வேறுபட்டு நின்றார்கள். பேஸ்புக்கிற்கான ஆழமான சோதனையோட்டம் நடைபெற இருக்கிறது.

மார்க் தன்னுடைய எண்ணத்தை அறைத் தோழர்களுடன் பகிர ஆரம்பித்தார். முதலில் புகைப்படங்களைப் பதிவேற்றி படங்களுக்கு ஏற்ற விலங்கின் பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்த தன் எண்ணத்தை சிறிது மாற்றினார் மார்க், முதலில் எண்ணியது போல் படங்களுக்கு கீழ் பின்னோட்டம் இடாமல், ஒவ்வொரு படங்களையும் பல்வேறு விலங்குகளுடன் ஒப்பிட்டு, அதில் சிறந்த முகம் இருப்பது, அந்த படத்தில் இருக்கும் நபருக்கா இல்லை அந்த விலங்கிற்கா என்பது போல் மாற்றினார்! உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த/பிடிக்காத நண்பரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் அவருடைய படம் ஒரு பக்கமும் அதற்க்கு இணையாக மற்றொரு பக்கத்தில் ஒரு விலங்கும் இருக்கிறது இதில் உங்கள் வோட்டு யாருக்கு என்பதே விளையாட்டு, இதனை தன் நண்பர்களிடம் மார்க் பகிரும் பொழுதே அவர்கள் இந்த விளையாட்டை சிறிது மாற்றி அமைத்தார்கள். ஒட்டு மொத்த இணைய உலகமும் விளையாண்டு கொண்டிருக்கும் பேஸ்மேட்ச் தான் ஆனால் இதில் படங்களாக இடம் பெறப்போவது பிரபலங்கள் அல்ல ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தங்களுடன் பயிலும் மாணவர்கள்.
தைக் கேட்டதும் மார்க் உற்சாகமாகிவிட்டார். அடுத்த கட்ட வேலை எல்லாருடைய படங்களையும் சேகரிக்க வேண்டும், இரு படங்களை நீங்கள் ஒப்பிடும் பொழுது யாருக்கு உங்கள் ஓட்டை அளித்தீர்கள் என்பதை கணினிக்குப் புரிய வைக்க வேண்டும். ஒன்றின் பின் ஒன்றாக படங்களை வரவைக்க வேண்டும், அதிக ஓட்டுகள் பெற்றவரை அறிவிக்க வேண்டும் என்று மூளை அவரது உத்தரவுகளுடன் அடுத்த அடுத்த நகர்வுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. நினைத்தாலே கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது இல்லையா, மார்க் இதை வடிவமைக்க எடுத்துக் கொண்ட நேரம் மிகக் குறைவே. கணினியுடன் கணினி மொழியில் பேசுவதற்கான வேலைக்கு ஆயத்தமானார். கிர்க்லேன்ட் ஹவுஸ் பேஸ்புக்கை அதிலிருந்து படங்களை தரவிறக்கம் செய்ய இயலாதவாறு வடிவமைத்து இருந்தார்கள்.ஆனால் மார்க்கோ அந்த பேஸ்புக்கில் இருக்கும் மொத்த படங்களையும் தரவிறக்கம் செய்வதற்கான கோடிங்கை சில நிமிடங்களில் எழுதி தரவிறக்கமும் செய்துவிட்டார். ஹாக்கிங்( திருடுதல்) என்றும் சொல்லாம். 




ஹார்வர்டில் மொத்தம் ஒன்பது விடுதி, ஒவ்வொரு விடுதியில் இருக்கும் படங்களையும் தான் இருந்த இடத்தில இருந்து தரவிறக்கம் செய்ய ஆரம்பித்தார், அதில் சில விடுதிகளின் பேஸ்புக்கில் நுழைய பிறவிடுதி மாணவர்களுக்கு அனுமதி இல்லை, அப்படிப்பட்ட விடுதிகளில் இருக்கும் புகைப்படங்களை தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் தரவிறக்கம் செய்தார். படங்கள் அனைத்தும் தன கணினிக்கு வந்துவிட்டது, இனி செய்ய வேண்டியது எல்லாம் தான் நினைத்த மாதிரியான தளம் வடிவமைப்பது தான். அதையும் சில மணிநேரங்களில் செய்து முடித்தார். இங்கே மார்க் கவனிக்காமல் விட்ட சில விசயங்களே அவரை குற்றவாளியாக்கியது. அதற்குள் நுழையும் முன் பேஸ்மேஷுக்குள் நுழைந்து முழுவதையும் பார்த்துவிடுவோம். பேஸ்மேஷ் வடிவமைத்து முடித்ததும் அதனுடைய லின்க்கை தனது நண்பர்களுக்கு மெயில் மூலம் தெரிவித்துவிட்டு வேறுவேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்.

சிலமணி நேரங்கள் கழித்து மீண்டும் வந்து தனது மடிக்கணியை தொடும் பொழுது தான் உணர்ந்து கொண்டார் மார்க், தான் செய்த மிகப்பெரிய தவறை. தவறு என்பதை விட மிகச் சிறந்த அனுபவம் என்றும் கொள்ளலாம். அந்த நிமிடம் அவரது கணினியை  தொடாமல் இன்னும் சில மணி நேரங்கள் அப்படியே வைத்திருந்தார் என்றால் நிச்சயம் அவரது கணினி வெடித்திருக்கும். அந்த அளவிற்கு சூடு ஏறி இருந்தது. சில நிமிடங்கள் மார்க்கிற்கு ஒன்றும் புரியவில்லை, கணினியைத் திறந்து பார்த்தவருக்கு மற்றுமொரு அதிர்ச்சி, நிச்சயமாக இது இன்ப அதிர்ச்சி, அவர் வெளியிட்டிருந்த பேஸ்மாஷிற்குக் கிடைத்திருந்த ஹிட்ஸ் தான் அவரது இன்ப அதிர்சிக்குக் காரணம். ஒன்றும் இல்லை அவர செய்தது ஒன்றே ஒன்று தான், தான் வடிவமைத்த தளம் எப்படி வேலை செய்கிறது என்று பார்பதற்காக தனது மூன்று நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார், பேஸ்மேஷ் விளையாட்டை விளையாடிப் பார்த்த நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே அவர்கள் தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அந்த லின்க்கை மெயில் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர், சிலமணி நேரங்களில் ஹார்வர்ட் பல்கலை கழகமே பேஸ்மேஷில் மூழ்கிவிட்டது, அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் ஓட்டு போட்டுக் கொண்டிருந்தது தங்களுக்குப் பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள் முகங்களுக்கு. யாரோ ஒருவரை இத்தனை காலம் பார்த்து ஓட்டு பழகியவர்களுக்கு தங்களுடன் படிக்கும் நடமாடும் விளையாடும் நண்பர்களைப் பார்த்ததும் ஆர்வம் வரமால் இருந்தால் தான் ஆச்சரியம்.

பேஸ்மேஷ் தளம் திறந்த சில மணி நேரங்களில் அதை விளையாடிய சில நூறு பேர்களின் மூலம் கிடைத்த ஹிட்ஸ் எவ்வளவு தெரியுமா இருபத்தி இரண்டாயிரம் ஹிட்ஸ். நினைத்துப் பாருங்கள் சில மணி நேரங்களில் இருபத்தி இரண்டயிராம் ஓட்டுகள் கிடைத்தது என்றால் மார்க் பேஸ்மெஷை எவ்வளவு நுட்பமாக செதுக்கி இருப்பார் மேலும் சற்றே நினைவு கூறுங்கள் அதை வடிவமைக்க எடுத்துக் கொண்ட கருப்பொருள் எவ்வளவு முக்கியமானது மற்றும் நுட்பமானது என்று. எல்லாம் சரி ஆனால் அவர் குற்றவாளி ஆனதற்கான காரணங்கள் வேண்டும் அல்லவா? 

பேஸ்மேஷ் தளத்தை தனது கணினியில் இயங்கச் செய்த மார்க் அதற்க்கு இவ்வளவு ஹிட்ஸ் வரும், குறிப்பிட்ட குறைந்த கால அளவில் இத்தனை பேர் விளையாடுவார்கள் என்று கனவிலும் அவர் நினைக்க வில்லை. ஒரு தளம் தடை இல்லாமல் இயங்க அதற்க்கு என்று சர்வர் வேண்டும், அதனை டெடிகேட் சர்வர் என்று சொல்வார்கள். ஆனால் மார்க் தனது வலைதளத்தை இயக்க உபயோகித்தது தனது மடிக்கணினியை அதனால் அது வேலை செய்ய திணறி மூச்சுமுட்டி உய்ரைவிடும் நிலைக்கு வந்துவிட்டது, சரியான நேரத்தில் மார்க் கணினியைப் பார்த்ததால் அது எரிந்து போவதில் இருந்து காப்பாற்றினார். அடுத்தது இணைய இணைப்பு. மொத்த ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் மார்க்கின் கணினியைத் தொடர்பு கொள்ளும் இணைய இணைப்பை எடுத்துக் கொண்டதால் வேறு யாராலும் வேறு எந்த வலை தளத்தையும் உபயோகிக்க முடியவில்லை நெட்வொர்க் ட்ராபிக் என்று சொல்லுவார்கள் அதாவது ஹார்வர்ட் இணைய இணைப்பே ஸ்தம்பித்துவிட்டது. அங்கு இருக்கும் மாணவர்கள் விரிவுரையாளர்கள் யாராலும் இணையத்தை உபயோகிக்க முடியவில்லை. 





மார்க் தனது வலைதளத்தை நிறுத்திய பின் தான் இணைய இணைப்பு சரி ஆகியது,இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹார்வர்டும் பிரச்சனைக்குக் காரணம் மார்க் தான் என்று கண்டறிந்துவிட்டது. அடுத்த பூதம் புகைப்படம் வடிவில் கிளம்பியது. பேஷ்மெஸ் மூலம் அதிக ஓட்டு பெற்றவரக்ள் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஹீரோ ஆனார்கள், ஆனால் ஜீரோ ஆனவர்கள் மத்தியிலோ மார்க் வில்லன் ஆனார். குறிப்பாக கறுப்பினத்தவர்களும் பெண்களும் பேஸ்மெஷ் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் எல்லாருமே மார்க்கிற்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்தார்கள். கல்லூரி நிர்வாக படங்களை திருடிய குற்றம் மற்றும் இணைய இணைப்பை ஸ்தம்பிக்க வாய்த்த குற்றம் என்று மார்க் மீது குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்தது, ஒழுங்கு நிர்வாகக் கமிட்டியின் முன்பு ஆஜராகும் படி மார்க்கிற்கு கடிதமும் வந்தது.

மிஸ்டர் மார்க் ஷக்கர்பெர்க், 

ல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான புகைப்படங்களை திருடிய குற்றத்திற்காகவும், அந்த படங்களை உங்கள் சொந்த உபயோகதிற்கு பயன்படுதியமைக்காகவும், கல்லூரி இணைய செயல்பாட்டை முடக்கி இயங்கவிடாமல் செய்தமைக்காகவும், தனிப்பட்ட நபர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் புகைப்படங்களை விளையாட்டுப் பொருட்களாக மாற்றியமைக்காகவும் கல்லூரி நிர்வாகம் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது. கல்லூரி ஒழுங்குக் கமிட்டியின் முன்பு ஆஜராகி உங்கள் தரப்பை விளக்க வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிடுகிறது. 
- ஹார்வர்டு பல்கலைக்கழகம்  

காவிரிப்பூம்பட்டினம்

"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.
ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்"
மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".
இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி" !!


ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.


மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது! இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!! தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

வரலாற்றுத் தேடல் தொடரும் !!
rjx
rjx

சிறுவயதில் நான்...!!!


அம்மா

அம்மா என்று அழைப்பதற்கு காரணம்
இருக்கிறது….
"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே
இது தமிழுக்கு மட்டுமே உள்ள
சிறப்பு......
அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து
( மெய் என்றால் உடல் என்று பொருள் )
-அதாவது உடலையும் ,உயிரையும்
இணைத்துகொடுப்பவர்
"அம்மா " ♥

நட்பு...!!!!



தோள் கொடுத்தே தாங்கிட...,
தோழன் நான் இருக்க.....,
தோல்விகள் பல கண்டாலும்
துன்பங்கள் பல வந்தாலும்..,
இன்பம் என்னும் வார்த்தையை
இந்த நண்பன் கொடுப்பான்
உந்தன் துக்கத்தை தூக்கெறிய.,
உந்தன் தோல்வியை துடைத்தெறிய..,
இந்நண்பன் வருவான் விரைவுடன்...
விரும்புங்கள் நட்பை என்றுன்றும்.,
இந்த நண்பனையும்....!!!!!!!!!!!!

அவள் ...!!!!



இறைவன் இறைஞ்சிய படைப்புகளுள்
இனிதே அவள் ஒருத்தி தான்..,
இனிய தமிழெடுத்த பேச்சும்.,
இனிப்பு கொண்டிந்த முகமும்.,
இரட்டித்து அவளை கண்டு..,
இயங்கினேன்......

சொல்ல வெழும் நா....,
சொல்லிட திகைக்கும் அவள்.,
சொக்க தங்க குணங்கள்....
சொக்கியே அவளிடம் விழுந்தேன்....
சகியே புரிந்து கொள்......