Thursday, June 27, 2013

என்னவள்...

காலை நேரம்..,
கார்கால கதிரவன்
தன் கதிர்களை
கட்டவிழ்த்து விட்டும்..,
வாடிய மரங்களை
கண்டே வியப்புற்றேன்...!!!!
வியந்த வண்ணம் வினவிய
என் கேள்விக்கு பதிலாக...,
"அழகு பதுமை ஒன்று
எங்களை காணாமல் சென்று விட்டாள்"
என்றே வந்தது....
அது யாரடி..,
மரங்களும் வாட வைக்கும்
அழகு கொண்ட பதுமை..,
என்று அவளை பார்த்து
வர ஓடோடி விரைந்தேன்...
நான் காண்பது கனவா..,
இல்லை நிகழ் உலகத்து நினைவா...?
என யூகிக்க முடியாமல்
உலகின் எட்டா அதிசயம்
ஒன்றை கண்முன்னே கண்டேன்....!!!
நான் மட்டும் தான் அழகு
என கோள் முழுதும்
கொக்கரிக்கும் வான வில்லையும்
நீ தான் அழகு
என வியக்க வைக்கும்
அழகை அவளிடத்தில் கண்டேன்....!!!!
தேனுக்காக மலரிடத்தில் பாய்ந்தோடும்
பருவ சிட்டுகளும் வண்டுகளும்
பூவை விட சிறப்பானவள்
என எண்ணியே அவளை
சுற்றி ரீங்காரம் இடுவதை
கண் கொண்டே மெய்மறந்தேன்...
ஜல்ஜல் என அவள்
காலிடத்து கொண்டெழுந்த சப்தமும்
கலகல என அவள்
கையிடத்து கொண்டெழுந்த சப்தமும்
அவளையே இசை உலகு
முழுதிற்கும் அர்த்தமாகி காட்டிற்று....!!!!
அவளின் அதட்டலான பேச்சும்
அழகை காட்டும் சிரிப்பும்
அன்பை காட்டும் கொஞ்சலும்
உணர்வை காட்டும் உடைகளும்
அவள் தமிழ்பெண் என்பதையும் மீறி
தங்கத்தமிழ்பெண்ணாகவே எனக்கு காட்டின...!!!!!
மை பூசிய கருவிழிகள்
காந்ததினும் கொடிய காந்தம்...,
அஃது உண்மை என்பதனாலையோ.,
என் மனம் டக்கென்று
அவளால் கவரப்பட்டு
இன்றும் வரமுடியாமல் தவிக்கிறது....!!!
அன்னநடை என்று வார்த்தைகளால்
மட்டுமே அறியப்பட்ட நான்..,
இன்று அதை அவளால்
காணும் பாக்கியமும் பெற்றேன்....
அந்த நடையை காணவே
கோடானுகோடி கண்கள் வேண்டும் எமக்கு...!!!!!
அழகான பெண்ணுக்கு ஆணவமுண்டு
என்று பிறர்கூற கேள்விப்பட்ட
நான் இன்றே அறிந்தேன்...,
என்னவளுக்கு ஆணவமுண்டு, அன்புண்டு
அழகுண்டு, குணமுண்டு, உணர்வுண்டு,
குடும்பத்தை மட்டும் நேசிக்கும் சுயநலமுண்டு....!!!!

No comments:

Post a Comment