ஒரு சுவாரசியமான வரலாறு, ஒரு உணர்ச்சிமிகுந்த ஊக்கமும் கூட......
1942 முதல் 1945 வரை தொடர்ந்து 5 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஒரு மைல் தூரத்தை மிக விரைவாக கடந்தது தான் அந்த சாதனை. 1942 ஆம் ஆண்டு ஒரு வீரர் ஒரு மைல் தூரத்தை 4:06.4 நிமிட நேரத்தில் கடந்து சாதனை புரிந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக இந்த சாதனை முறியடிக்கப்பட்டு 1945இல் 4:01.3 என்ற மின்னல் வேகத்தில் இன்னொரு வீரர் சாதனை புரிந்ததே இறுதியான சாதனையாக அமைந்தது.
1945க்குப் பிறகு பல வருடங்களாக இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்தில் கடப்பது என்பது கேள்விக்கிறியாகவே இருந்தது.
இந்த கேள்வி ஓரிரு ஆண்டுகளாக அல்ல, பல நூற்றாண்டுகளாகவே உலகில் நிலவி வந்தது. ஆம்! கிரேக்கர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள்ளாக பயணிக்க வேண்டும் என்று எண்ணி தோற்றுப்போயுள்ளனர். பிறகு கிரேக்கர்கள் ஒரு மனிதன் தன்னுடைய இயல்பான திறனின் மூலம் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்தில் கடப்பது முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். சரி! இயல்பான திறனை வைத்து தானே முடியாது, ஒரு சிங்கத்தை வைத்து விரட்டினால் பயத்திலாவது ஓடி அந்த இலக்கை அடைவது சாத்தியமா என்று பார்க்கலாம் என்று அதையும் முயற்ச்சித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.
இது இறுதியில் ஒரு ஆய்வாகவும் சவாலாகவுமே மாறியது. உலகின் பிரபலமான, பயிற்சி பெற்ற முன்னனி வீரர்களைக் கொண்டு முயற்சி செய்த போதும் கூட ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களில் மனிதனால் கடக்க முடியவில்லை. அதன் பிறகு மருத்துவ வல்லுனர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர், "ஒரு மனிதனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்தில் கடக்கவே முடியாது. இமயமலையை எட்டுவதைப் போல இதுவும் இயலாத காரியம்!" என்பதே அந்த முடிவு!
பிறகு 1953இல் ஒரு மனிதன் இமய மலையையும் கடந்தான்! அப்போது எல்லோரும் தீர்மானித்தது, இமய மலையைக் கூட ஒரு மனிதனால் கடந்து விட முடியும் ஆனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்தில் கடப்பது முடியாது என்று. இதை அப்போது அத்துனை மருத்துவர்களும், உடற் பயிற்சியாளர்களும் ஒப்புக் கொண்டனர்.
1954 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள், ரோகர் பேனிஸ்டர் என்னும் மருத்துவ மாணவர் அதே ஒரு மைல் தூரத்தை 03:59:4 என்ற நேரத்தில் கடந்து பல்லாண்டுகளாக நிலவி வந்த நம்பிக்கையை உடைத்தெறிந்தார். இதை விட சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு வெறும் 56 நாட்களில் ஜான் லேண்டி என்று அடுத்து ஒருவர் 03:57:9 என்ற நேரத்தில் அவரது சாதனையை முறியடித்தார். இது மட்டுமல்ல அதே ஆண்டில் 37 பேர் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் கடந்தனர். அடுத்த ஆண்டில் சுமார் 300 பேர் அந்த ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் கடந்தனர். இறுதியாக மருத்துவர்களும் வல்லுனர்களும் ஒரு முடிவுக்கு வந்தனர். "ஒரு மைல் என்பது ஒரு தடையல்ல, அதை கடக்க முடியாது என்று மனதளவில் ஊட்டப்பட்டதே வீரர்களை இத்தனை காலம் அதை எட்ட முடியாமல் தடுத்தது. அந்த மனத் தடையை ரோகர் தகர்த்தெறிந்தார்."
ஆம் ஒன்று முடியாது என்று பல வருடங்களாக இருந்த போது அதை செய்து முடிக்க மனிதர்களால் முடியவில்லை. அதையே ஒருவன் செய்து முடித்த போது அவனால் முடிகிறது என்னால் ஏன் முடியாது என்று மனித மனம் தவிக்கிறது. இதன் வெளிப்பாடு தான் பல நூற்றாண்டுகளாக உடைக்க முடியாத சாதனையை ஒருவன் உடைத்ததும் அடுத்தடுத்தாக ஒரு கூட்டமே உடைத்தெறிந்திருக்கிறது. தடை என்பது நமக்கு நாமே போட்டுக் கொள்வது தான். நாம் யாரிடமாவது ஒரு இயல்புக்கு மாறான விடயத்தைப் பேசும் போது எல்லோரும் "ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறான்" என்பர். ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாதா? உலகைப் பற்றி ஆய்வு செய்ய அங்கேயே கோட்டைக் கட்டி ஆய்வு நடத்தி வருகிறது மனித இனம்! கனவுகள் அடையக்கூடியவை, கற்பனைகள் களையக்கூடியவை. இவை இரண்டிற்கும் சரியான புரிதலை நீங்கள் கொண்டால் நீங்களும் வெள்ளலாம்.
தன் நம்பிக்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது பார்த்தீர்களா! முடிவு என்பது உண்மையில் முடிவே அற்றது, முடியாது என்பது என்றாவது ஒரு நாள் முடிந்தே ஆவது!
1942 முதல் 1945 வரை தொடர்ந்து 5 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஒரு மைல் தூரத்தை மிக விரைவாக கடந்தது தான் அந்த சாதனை. 1942 ஆம் ஆண்டு ஒரு வீரர் ஒரு மைல் தூரத்தை 4:06.4 நிமிட நேரத்தில் கடந்து சாதனை புரிந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக இந்த சாதனை முறியடிக்கப்பட்டு 1945இல் 4:01.3 என்ற மின்னல் வேகத்தில் இன்னொரு வீரர் சாதனை புரிந்ததே இறுதியான சாதனையாக அமைந்தது.
1945க்குப் பிறகு பல வருடங்களாக இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்தில் கடப்பது என்பது கேள்விக்கிறியாகவே இருந்தது.
இந்த கேள்வி ஓரிரு ஆண்டுகளாக அல்ல, பல நூற்றாண்டுகளாகவே உலகில் நிலவி வந்தது. ஆம்! கிரேக்கர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள்ளாக பயணிக்க வேண்டும் என்று எண்ணி தோற்றுப்போயுள்ளனர். பிறகு கிரேக்கர்கள் ஒரு மனிதன் தன்னுடைய இயல்பான திறனின் மூலம் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்தில் கடப்பது முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். சரி! இயல்பான திறனை வைத்து தானே முடியாது, ஒரு சிங்கத்தை வைத்து விரட்டினால் பயத்திலாவது ஓடி அந்த இலக்கை அடைவது சாத்தியமா என்று பார்க்கலாம் என்று அதையும் முயற்ச்சித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.
இது இறுதியில் ஒரு ஆய்வாகவும் சவாலாகவுமே மாறியது. உலகின் பிரபலமான, பயிற்சி பெற்ற முன்னனி வீரர்களைக் கொண்டு முயற்சி செய்த போதும் கூட ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களில் மனிதனால் கடக்க முடியவில்லை. அதன் பிறகு மருத்துவ வல்லுனர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர், "ஒரு மனிதனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்தில் கடக்கவே முடியாது. இமயமலையை எட்டுவதைப் போல இதுவும் இயலாத காரியம்!" என்பதே அந்த முடிவு!
பிறகு 1953இல் ஒரு மனிதன் இமய மலையையும் கடந்தான்! அப்போது எல்லோரும் தீர்மானித்தது, இமய மலையைக் கூட ஒரு மனிதனால் கடந்து விட முடியும் ஆனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்தில் கடப்பது முடியாது என்று. இதை அப்போது அத்துனை மருத்துவர்களும், உடற் பயிற்சியாளர்களும் ஒப்புக் கொண்டனர்.
1954 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள், ரோகர் பேனிஸ்டர் என்னும் மருத்துவ மாணவர் அதே ஒரு மைல் தூரத்தை 03:59:4 என்ற நேரத்தில் கடந்து பல்லாண்டுகளாக நிலவி வந்த நம்பிக்கையை உடைத்தெறிந்தார். இதை விட சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு வெறும் 56 நாட்களில் ஜான் லேண்டி என்று அடுத்து ஒருவர் 03:57:9 என்ற நேரத்தில் அவரது சாதனையை முறியடித்தார். இது மட்டுமல்ல அதே ஆண்டில் 37 பேர் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் கடந்தனர். அடுத்த ஆண்டில் சுமார் 300 பேர் அந்த ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் கடந்தனர். இறுதியாக மருத்துவர்களும் வல்லுனர்களும் ஒரு முடிவுக்கு வந்தனர். "ஒரு மைல் என்பது ஒரு தடையல்ல, அதை கடக்க முடியாது என்று மனதளவில் ஊட்டப்பட்டதே வீரர்களை இத்தனை காலம் அதை எட்ட முடியாமல் தடுத்தது. அந்த மனத் தடையை ரோகர் தகர்த்தெறிந்தார்."
ஆம் ஒன்று முடியாது என்று பல வருடங்களாக இருந்த போது அதை செய்து முடிக்க மனிதர்களால் முடியவில்லை. அதையே ஒருவன் செய்து முடித்த போது அவனால் முடிகிறது என்னால் ஏன் முடியாது என்று மனித மனம் தவிக்கிறது. இதன் வெளிப்பாடு தான் பல நூற்றாண்டுகளாக உடைக்க முடியாத சாதனையை ஒருவன் உடைத்ததும் அடுத்தடுத்தாக ஒரு கூட்டமே உடைத்தெறிந்திருக்கிறது. தடை என்பது நமக்கு நாமே போட்டுக் கொள்வது தான். நாம் யாரிடமாவது ஒரு இயல்புக்கு மாறான விடயத்தைப் பேசும் போது எல்லோரும் "ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறான்" என்பர். ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாதா? உலகைப் பற்றி ஆய்வு செய்ய அங்கேயே கோட்டைக் கட்டி ஆய்வு நடத்தி வருகிறது மனித இனம்! கனவுகள் அடையக்கூடியவை, கற்பனைகள் களையக்கூடியவை. இவை இரண்டிற்கும் சரியான புரிதலை நீங்கள் கொண்டால் நீங்களும் வெள்ளலாம்.
தன் நம்பிக்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது பார்த்தீர்களா! முடிவு என்பது உண்மையில் முடிவே அற்றது, முடியாது என்பது என்றாவது ஒரு நாள் முடிந்தே ஆவது!

No comments:
Post a Comment